பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை அன்னியூர் அமர் மன்னுசோதியே.
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க் குழகன், சேவடி தொழுது வாழ்மினே!
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச் சோதி, நாமமே ஓதி உய்ம்மினே!
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச் சித்தர், தாள் தொழ முத்தர் ஆவரே.
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர் மறை உளான், கழற்கு உறவு செய்ம்மினே!