பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உரைத்தன வல்கரி ஒன்று மூடிய நிரைத்த இராசி நிரை முறை எண்ணிப் பிரைச் சதம் எட்டும் பேசியே நந்தி நிரைத்த இயமம் நியமம் செய்தானே.
செய்த இயம நியமம் சமாதி சென்று உய்யப் பராசத்தி உத்தர பூருவ மெய்த கவச நியாசங்கள் முத்திரை எய்த உரை செய்வன் இந்நிலை தானே.
அந்நெறி இந்நெறி என்னாது அட்டாங்கத் தன் நெறி சென்று சமாதியிலே நின்மின் நல் நெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம் புல் நெறி யாகத்தில் போக்கு இல்லை ஆகுமே.
இயம நியமமே எண் இலா ஆதனம் நயம் உறு பிரணா யாமம் பிரத்தி ஆகாரம் சயமிகு தாரணை தியானம் சமாதி அயம் உறும் அட்டாங்கம் ஆவது ஆமே.