வ.எண் |
பாடல் |
1 |
திருமாலும் நான்முகனும் தேர்ந்துணரா(து) அங்கண்
அருமால் உற;அழலாய் நின்ற - பெருமான்
|
2 |
பிறவாதே தோன்றினான்; காணாதே காண்பான்;
துறவாதே யாக்கை துறந்தான் - முறைமையால்
|
3 |
ஆழாதே ஆழ்ந்தான்; அகலா(து) அகலியான்;
ஊழால் உயராதே ஓங்கினான் - சூழொளிநூல்
|
4 |
ஓதா துணர்ந்தான்; நுணுகாது நுண்ணியான்
யாதும்அணுகா துஅணுகியான்; - ஆதி
|
5 |
அரியாகிக் காப்பான்; அயனாய்ப் படைப்பான்;
அரனாய் அழிப்பவனுந் தானே - பரனாய
|
6 |
தேவர் அறியாத தோற்றத்தான்; தேவரைத்தான்
மேவிய வாறே விதித்தமைத்தான்; - ஓவாதே
|
7 |
எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள்
அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்; - எவ்வுருவும்
|
8 |
தானேயாய் நின்றளிப்பான்; தன்னிற் பிறிதுருவம்
ஏனோர்க்குக் காண்பரிய எம்பெருமான்; - ஆனாத
|
9 |
சீரார் சிவலோகந் தன்னுள் சிவபுரத்தில்
ஏரார் திருக்கோயி லுள்ளிருப்ப - ஆராய்ந்து
|
10 |
செங்கண் அமரர் புறங்கடைக்கண் சென்றீண்டி
எங்கட்குக் காட்சிஅருள் என்றிரப்ப - அங்கொருநாள்
|
11 |
பூமங்கை, பொய்தீர் தரணி புகழ்மங்கை,
நாமங்கை என்றிவர்கள் நன்கமைத்த - சேமங்கொள்
|
12 |
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை
தேன்மொய்த்த குஞ்சியின்மேல் சித்திரிப்ப - ஊனமில்சீர்
|
13 |
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர்
செந்தா மரைமலர்நூ றாயிரத்தால் - நொந்தா
|
14 |
வயந்தன் தொடுத்தமைத்த வாசிகை சூட்டி
நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப் - பயன்கொள்
|
15 |
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தம் கொண்டு
தலமலிய ஆகந் தழீஇக் - கலைமலிந்த
|
16 |
கற்பகம் ஈன்ற கமழ்பட் டினையுடுத்துப்
பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து - விற்பகரும்
|
17 |
சூளா மணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர்
வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத் - தோளா
|
18 |
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங்(கு)
அணிவயிரக் கண்டிகை பொன்னாண் - பணிபெரிய
|
19 |
ஆரம்அவைபூண்(டு) அணிதிக ழும்சன்ன
வீரந் திருமார்பில் வில்இலக - ஏருடைய
|
20 |
எண்தோட்கும் கேயூரம் பெய்துஉதர பந்தனமும்
கண்டோர் மனம்மகிழக் கட்டுறீஇக் - கொண்டு
|
21 |
கடிசூத் திரம்புனைந்து, கங்கணம்கைப் பெய்து
வடிவுடைய கோலம் புனைந்தாங்கு - அடிநிலைமேல்
|
22 |
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து
வந்து வசுக்கள் இருக்குரைப்ப - அந்தமில்சீர்
|
23 |
எண்ணருங் கீர்த்தி எழுவர் இருடிகளும்
அண்ணல்மேல் ஆசிகள் தாம்உணர்த்த - ஒண்ணிறத்த
|
24 |
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப
மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப் - பொன்னியலும்
|
25 |
அங்கி கமழ்தூபம் ஏந்த யமன்வந்து
மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச் - செங்கண்
|
26 |
நிருதி முதலோர் நிழற்கலன்கள் ஏத்த
வருணன் மணிக்கலசந் தாங்கத் - தெருவெலாம்
|
27 |
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத்
தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப - மேவியசீர்
|
28 |
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள்
வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத் - தூய
|
29 |
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன்
திருத்தகு மாநிதியஞ் சிந்தக் - கருத்தமைந்த
|
30 |
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள்
பொங்கு கவரி புடைஇரட்டத் - தங்கிய
|
31 |
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண்
கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக
|
32 |
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய்
மோகத்(து) உருமு முரசறையப் - போகம்சேர்
|
33 |
தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும்
கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
|
34 |
விண்ணார் பணிய உயர்ந்த விளங்கொளிசேர்
வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்கு - எண்ணார்
|
35 |
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத்
திருக்கடைகள் ஏழ்கடந்த போதில் - செருக்குடைய
|
36 |
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல்
ஆனாப்போர் இந்திரன் பின்படர - ஆனாத
|
37 |
அன்னத்தே ஏறி அயன்வலப்பால் கைபோதக்
கன்னவிலும் திண்டோள் கருடன்மேல் - மன்னிய
|
38 |
மால்இடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து
மேல்இடப்பால் மென்கருப்பு வில்இடப்பால் - ஏல்வுடைய
|
39 |
சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேல்எய்வான்
கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த - ஐங்கணையான்
|
40 |
காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி
வாமன் புரவிமேல் வந்தணைய - நாமஞ்சேர்
|
41 |
வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்தச்
சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண் தாழ்கூந்தல்
|
42 |
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி
சிங்க அடலேற்றின் மேற்செல்லத் - தங்கிய
|
43 |
விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்
அச்சா ரணர்அரக்க ரோடுஅசுரர் - எச்சார்வும்
|
44 |
சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லிலயத்
|
45 |
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
|
46 |
குடமுழவம் கொக்கரை, வீணை, குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் - இடவிய
|
47 |
மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு)இவற்றால்
எத்திசை தோறும் எழுந்தியம்ப, - ஒத்துடனே
|
48 |
மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்
கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் - தங்கிய
|
49 |
ஆறாம் இருதுவும், யோகும், அருந்தவமும்
மாறாத முத்திரையும், மந்திரமும், - ஈறார்ந்த
|
50 |
காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வால கிலியரும் வந்தீண்டி - மேலை
|
51 |
இமையோர் பெருமானே போற்றி! எழில்சேர்
உமையாள் மணவாளா போற்றி - எமைஆளும்
|
52 |
தீயாடி போற்றி! சிவனே அடிபோற்றி!
ஈசனே, எந்தாய், இறைபோற்றி! - தூயசீர்ச்
|
53 |
சங்கரனே போற்றி! சடாமகுடத் தாய்போற்றி!
பொங்கரவா பொன்னங் கழல்போற்றி! - அங்கொருநாள்
|
54 |
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப்
பாசுபதம் ஈந்த பதம்போற்றி! - தூய
|
55 |
மலைமேலாய் போற்றி! மயானத்தாய் வானோர்
தலைமேலாய் போற்றிதாள் போற்றி! - நிலைபோற்றி
|
56 |
போற்றிஎனப் பூமாரி பெய்து புலன்கலங்க
நாற்றிசையும் எங்கும் நலம்பெருக, - ஏற்றுக்
|
57 |
கொடியும் பதாகையும் கொற்றக் குடையும்
வடிவுடைய தொங்கலுஞ் சூழக் - கடிகமழும்
|
58 |
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான்
வாமான ஈசன் வரும்போழ்திற் - சேமேலே
|
59 |
வாமான ஈசன் மறுவில்சீர் வானவர்தம்
கோமான் படைமுழக்கம் கேட்டலுமே - தூமாண்பில்)
|
60 |
வானநீர் தாங்கி மறைஓம்பி வான்பிறையோ(டு)
ஊனமில் சூலம் உடையவாய் - ஈனமிலா
|
61 |
வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த
வள்ளலே போலும் வடிவுடைய - ஒள்ளிய
|
62 |
மாட நடுவில் மலர்ஆர் அமளியே
கூடிய போர்க்கள மாக்குறித்துக் - கேடில்
|
63 |
சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா
விலங்கு கொடும்புருவம் வில்லா - நலந்திகழும்
|
64 |
கூழைபின் தாழ, வளைஆர்ப்பக், கைபோந்து
கேழ்கிளரும் அல்குலாம் தேர்உந்திச் - சூழொளிய
|
65 |
கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனம்கவர
அங்கம் பொருதசைந்த ஆயிழையார் - செங்கேழ்நற்
|
66 |
பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகம்சேர்த்தி
நற்பெருங் கோலம் மிகைப்புனைந்து - பொற்புடைய
|
67 |
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சொல்லார் மகிழ்ந்தீண்டிச் - சோதிசேர்
|
68 |
சூளிகையும் சூட்டும் சுளிகையும் சுட்டிகையும்
வாளிகையும் பொற்றோடும் மின்விலக - மாளிகையின்
|
69 |
மேல்ஏறி நின்று தொழுவார்; துயர்கொண்டு
மால்ஏறி நின்று மயங்குவார் - நூலேறு
|
70 |
தாமமே தந்து சடாதாரி நல்கானேல்,
யாமமேல் எம்மை அடும்என்பார் - காமவேள்
|
71 |
ஆம்என்பார் அன்றென்பார் ஐயுறுவார்; கையெறிவார்
தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்; - பூமன்னும்
|
72 |
பொன்னரி மாலையைப் பூண்பார்அப் பூண்கொண்டு
துன்னரி மாலையாச் சூடுவார்; - முன்னம்
|
73 |
ஒருகண் எழுதிவிட்(டு) ஒன்றெழுதா தோடித்
தெருவம் புகுவார்; திகைப்பார்; - அருகிருந்த
|
74 |
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று
பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்; - அண்ணல்மேற்
|
75 |
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார்
திண்ணம் நிறைந்தார் திறந்திட்டார்; - ஒண்ணிறந்த
|
76 |
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள்; - தீதில்
|
77 |
இடையாலும் ஏக்கழுத்தம் மாட்டாள்; நலஞ்சேர்
உடையாலும் உள்உருக்க கில்லாள்; - நடையாலும்
|
78 |
கௌவைநோய் காளையரைச் செய்யாள்; கதிர்முலைகள்
வெவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்; - செவ்வன்நேர்
|
79 |
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள்;தன் செவ்வாயின்
வாக்கிற் பிறர்மனத்தும் வஞ்சியாள்; - பூங்குழலும்
|
80 |
பாடவம் தோன்ற முடியாள் இளவேய்த்தோள்
ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்; - நாடோறும்
|
81 |
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண்
சென்ற மனத்தினளாஞ்சேயிழையாள் - நன்றாகத்
|
82 |
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி
நீல அறுவை விரித்தெடுத்துக் கோலஞ்சேர்
|
83 |
பந்தரில் பாவைகொண்(டு) ஆடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றொருத்தி தான்வினவ - அந்தமில்சீர்
|
84 |
ஈசன் எரியாடி என்ன அவனைஓர்
காய்சின மால்விடைமேல் கண்ணுற்றுத் - தாய்சொல்
|
85 |
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமநூல்
நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள் - பொற்புடைய
|
86 |
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தாள்
காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள் - சீரொளிய
|
87 |
தாமரை ஒன்றின் இரண்டு குழைஇரண்டு
காமருவு கெண்டை,ஓர் செந்தொண்டை, - தூமருவு
|
88 |
முத்தம் முரிவெஞ் சிலை,சுட்டி, செம்பவளம்
வைத்தது போலும் மதிமுகத்தாள் - ஒத்தமைந்த
|
89 |
கங்கணம் சேர்ந்திலங்கு கையாள், கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள் - ஒண்கேழ்நல்
|
90 |
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள், ஆய்பொதியில்
சந்தனம் தோய்ந்த தடந்தோளாள் - வந்து
|
91 |
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள்
கடல்பட்ட இன்னமுதம் அன்னாள், - மடல்பட்ட
|
92 |
மாலை வளாய குழலாள், மணம்நாறு
சோலை இளங்கிளிபோல் தூமொழியாள், - சாலவும்
|
93 |
வஞ்சனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக்(கு)
அஞ்சனத்தை யிட்டங்(கு) அழகாக்கி - எஞ்சா
|
94 |
மணிஆரம் பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி
அணிஆர் வளைதோள்மேல் மின்ன - மணியார்ந்த
|
95 |
தூவெண் மணற்கொண்டு தோழியரும் தானுமாய்க்
காமன் உருவம் வரவெழுதிக் - காமன்
|
96 |
கருப்புச் சிலையும் மலர்அம்பும் தேரும்
ஒருப்பட்டு உடன்எழுதும் போழ்தில் - விருப்பூரும்
|
97 |
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன்
வானமால் ஏற்றின்மேல் வந்தணையத் - தானமர
|
98 |
நன்றறிவார் சொன்ன நலந்தோற்றும் நாண்தோற்றும்
நின்றறிவு தோற்றும் நிறைதோற்றும் - நன்றாகக்
|
99 |
கைவண்டும் கண்வண்டும் ஓடக் கலைஓட
நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள் - மொய்கொண்ட
|
100 |
மங்கை இடம்கடவா மாண்பினாள் வானிழிந்த
கங்கைச் சுழியனைய உந்தியாள் - தங்கிய
|
101 |
அங்கை கமலம்; அடிகமலம்; மான்நோக்கி
கொங்கை கமலம்; முகம்கமலம் - பொங்கெழிலார்
|
102 |
இட்டிடையும் வஞ்சி; இரும்பணைத்தோள் வேய்எழிலார்
பட்டுடைய அல்குலும் தேர்த்தட்டு - மட்டுவிரி
|
103 |
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில்
ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம் - வாய்ந்தசீர்
|
104 |
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக்
கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக் - குண்டலங்கள்
|
105 |
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித்
தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து, - மாதராள்
|
106 |
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும்
சொற்கோட்டி கொண்டிருந்த ஏவ்வைக்கண் - நற்கோட்டு
|
107 |
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல்
ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு - தெள்ளியநீர்
|
108 |
தாழுஞ் சடையான் சடாமகுடம் தோன்றுதலும்
வாழுமே மம்மர் மனத்தளாய்ச் - சூழொளியான்
|
109 |
தார்நோக்கும் தன்தாரும் நோக்கும்; அவனுடைய
ஏர்நோக்கும்; தன்ன தெழில்நோக்கும்; - பேரருளான்
|
110 |
தோள்நோக்கும் தன்தோளும் நோக்கும்; அவன்மார்பின்
நீள்நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து - நாண்நோக்காது
|
111 |
உள்ளம் உருக ஒழியாத வேட்கையாம்
வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள் - ஒள்ளிய
|
112 |
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர்
வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள் - ஏய்ந்தசீர்
|
113 |
ஈசன் சிலையும், எழில்வான் பவளமும்,
சேய்வலங்கை வேலும், திரள்முத்தும் - பாசிலைய
|
114 |
வஞ்சியும், வேயும், வளர்தா மரைமொட்டும்,
மஞ்சில்வரும் மாமதிபோல் மண்டலமும் - எஞ்சாப்
|
115 |
புருவமும், செவ்வாயும், கண்ணும் எயிறும்
உருவ நுகப்பும்மென் தோளும், - மருவினிய
|
116 |
கொங்கையும், வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர்
பங்கயப் போதனைய சேவடியாள்; - ஒண்கேழல்
|
117 |
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசீர்
ஆழித்தேர்த் தட்டனைய அல்குலாள்; - ஊழித்
|
118 |
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை
உருவுடைய நாண்மீன்சூழ்ந் தாற்போல் - பெருகொளிய
|
119 |
முத்தாரம் கண்டத் தணிந்தாள்; அணிகலங்கள்
மொய்த்தார வாரம் மிகப்பெருகி - வித்தகத்தால்
|
120 |
கள்ளுங், கடாமுங், கலவையுங் கைபோந்திட்டு
உள்ளும் புறமுஞ் செறிவமைத்துத் - தெள்ளொளிய
|
121 |
காளிங்கம் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த
தாளின்பத் தாமம் நுதல்சேர்த்தித் - தோளெங்கும்
|
122 |
தண்ணறுஞ் சந்தனம்கொண் டப்பிச் சதிர்சாந்தை
வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்(கு) - ஒண்ணுதலாள்
|
123 |
தன்அமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப்
பின்னும்ஓர் காமரம் யாழமைத்து - மன்னும்
|
124 |
விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட
மடல்வண்ணம் பாடும் பொழுதுஈண்டு - அடல்வல்ல
|
125 |
வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க்(கு) எஞ்ஞான்றும்
மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின் - கோல
|
126 |
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால
அணிஏறு தோளானைக் கண்டாங்(கு) - அணியார்ந்த
|
127 |
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக்
காட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி - நாட்டார்கள்
|
128 |
எல்லாரும் கண்டார் எனக்கடவுள் இக்காயம்
நல்லாய் படுமேற் படுமென்று - மெல்லவே
|
129 |
செல்ல லுறும்;சரணம் கம்பிக்கும்; தன்னுறுநோய்
சொல்லலுறும்; சொல்லி உடைசெறிக்கும்; - நல்லாகம்
|
130 |
காண லுறும்;கண்கள் நீர்மல்கும்; காண்பார்முன்
நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது; - பூணாகம்
|
131 |
புல்லலுறும் ‘அண்ணல்கை வாரான்’என் றிவ்வகையே
அல்ல லுறும்அழுந்தும் ஆழ்துயரால் - மெல்லியலாள்
|
132 |
தன்உருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப்
பொன்உருவங் கொண்டு புலம்புற்றாள் - பின்னொருத்தி
|
133 |
செங்கேழ்நல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா
அங்கேழ் அரிவைப் பிராயத்தாள் - ஒண்கேழ்நல்
|
134 |
திங்களும், தாரகையும், வில்லும், செழும்புயலும்
தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையால் - பொங்கொளிசேர்
|
135 |
மின்ஆர்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே
தன்ஆவார் இல்லாத் தகைமையாள் - எந்நாளும்
|
136 |
“இல்லாரை எல்லாரும் எள்குவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்”பென்னும் - சொல்லாலே
|
137 |
அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல்
மல்கிய சாந்தொடு பூண்புனைந்து - நல்கூர்
|
138 |
இடைஇடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார்
நடைபெடை அன்னத்தை வென்றாள்; - அடியிணைமேல்
|
139 |
பாடகம் கொண்டு பரிசமைத்தாள்; பன்மணிசேர்
சூடகம் முன்கை தொடர்வித்தாள்; - கேடில்சீர்ப்
|
140 |
பொன்அரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு
மன்னும் கழுத்தை மகிழ்வித்தாள்; - பொன்னனாள்
|
141 |
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம்
அண்ணல்மேல் தான்இட்ட ஆசையால் - முன்னமே
|
142 |
பாடல் தொடங்கும் பொழுதில் பரஞ்சோதி
கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும் - கூடிய
|
143 |
இன்னிசையும், இப்பிறப்பும், பேணும் இருந்தமிழும்
மன்னிய வீணையையுங் கைவிட்டுப் - பொன்னனையீர்
|
144 |
இன்றன்றே காண்ப(து) எழில்நலங் கொள்ளேனேல்
நன்றன்றே பெண்மை நமக்(கு)என்று - சென்றவன்தன்
|
145 |
ஒண்களபம் ஆடும்; ஒளிவாள் முகத்திரண்டு
கண்களபம் ஆடுவபோல் கட்டுரைத்தும் - ஒண்கேழ்நல்
|
146 |
கூந்தல் அவிழ்க்கும்; முடிக்கும் கலைதிருத்தும்;
சாந்தம் திமிரும் முலையார்க்கும் - பூந்துகிலைச்
|
147 |
சூழும்; அவிழ்க்கும்; தொழும்அழும் சோர்துயருற்(று)
ஆழும் அழுந்தும் அயாவுயிர்க்கும் - சூழொளிய
|
148 |
அங்கை வளைதொழுது காத்தாள்; கலைகாவாள்;
நங்கை இவளும் நலம்தோற்றாள்; - அங்கொருத்தி
|
149 |
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய
சீரார் தெரிவைப் பிராயத்தாள்; - ஓரா
|
150 |
மருளோசை யின்மழலை வாய்ச்சொலால் என்றும்
இருள்தீர் புலரியே ஒப்பாள்; - அருளாலே
|
151 |
வெப்பம் இளையவர்கட்(கு) ஆக்குதலால் உச்சியோ(டு)
ஒப்பமையக் கொள்ளும் உருவத்தாள் - வெப்பந்தீர்ந்(து
|
152 |
அந்தளிர்போற் சேவடியும், அங்கையும் செம்மையால்
அந்திவான் காட்டும் அழகினாள்; - அந்தமில்
|
153 |
சீரார் முகம்மதியம் ஆதலால் சேயிழையாள்
ஏரார் இரவின் எழில்கொண்டாள்; - சீராரும்
|
154 |
கண்ணார் பயோதரமும் நுண்ணிடையும் உண்மையால்
தண்ணிளங் காரின் சவிகொண்டாள்; - வண்ணஞ்சேர்
|
155 |
மாந்தளிர் மேனி; முருக்கிதழ்வாய்; ஆதலால்,
வாய்ந்த இளவேனில் வண்மையாள்; - மாந்தர்
|
156 |
அறிவுடையீர் நின்மின்கள்; அல்லார்போம் என்று
பறையறைவ போலும் சிலம்பு - முறைமையால்,
|
157 |
சீரார் திருந்தடிமேல் சேர்த்தினாள் தேர்அல்குல்
ஓரா தகலல் உறாதென்று - சீராலே
|
158 |
அந்துகிலும், மேகலையும், சூழ்ந்தாள்; அணிமுலைகள்
மைந்தர் மனங்கவரும் என்பதனால் - முந்துறவே
|
159 |
பூங்கச்சி னால்அடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால்
காம்பொத்த தோளிணையைக் காப்பேவி - வாய்ந்தசீர்
|
160 |
நற்கழுத்தை நல்ஆரத் தால்மறைத்துக் காதுக்கு
விற்பகரும் குண்டலங்கள் மேவுவித்து - மைப்பகரும்
|
161 |
காவியங் கண்ணைக் கதம்தணிப்பாள் போலத்தன்
தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி - யாவரையும்
|
162 |
ஆகுலம் ஆக்கும் அழகினாள் அன்னமும்
கோகிலமும் போலும் குணத்தினா - ளாகிப்
|
163 |
பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி
அலர்சுமந்து கூழைய வாகிக் - கலைகரந்(து)
|
164 |
உள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ்த்தாழ்ந்து
கள்ஆவி நாறும் கருங்குழலாள் - தெள்ளொளிய
|
165 |
செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி
அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப் - பொங்கெழிலார்
|
166 |
பொற்கவற்றின், வெள்ளிப் பலகை மணிச்சூது
நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில் - விற்பகரும்
|
167 |
தோளான், நிலைபேறு, தோற்றம், கேடாய்நின்ற
தாளான் சடாமகுடம் தோன்றுதலும், - கேளாய
|
168 |
நாணார் நடக்க; நலத்தார்க் கிடையில்லை;
ஏணார் ஒழிக; எழிலொழிக; - பேணும்
|
169 |
குலத்தார் அகன்றிடுக; குற்றத்தார் வம்மின்;
நலத்தீர் நினைமின்நீர் என்று - சொலற்கரிய
|
170 |
தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப்
பூவார் அலங்கல் அருளாது - போவானேல்,
|
171 |
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து
வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாங்கு
|
172 |
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள்
பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் - மண்ணின்மேல்
|
173 |
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே வுளவென்று - பண்டையோர்
|
174 |
கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல்
விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள் - கட்டரவம்
|
175 |
அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த
வஞ்சிக் கொடிநுடங்கு நுண்ணிடையாள் - எஞ்சாத
|
176 |
பொற்செப் பிரண்டு முகடு மணிஅழுத்தி
வைத்தன போல வளர்ந்தே ந்தி - ஒத்துச்
|
177 |
சுணங்கும் சிதலையுஞ் சூழ்போந்து கண்டார்க்(கு)
அணங்கும் அமுதமுமாய்த் தோன்றி - இணங்கொத்த
|
178 |
கொங்கையாள், கோலங்கட் கெல்லாம்ஓர் கோலமாம்
நங்கையாள், நாகிளவேய்த் தோளினாள்; - அங்கையால்
|
179 |
காந்தட் குலம்பழித்தாள்; காமவேள் காதலாள்;
சாந்தம் இலங்கும் அகலத்தாள்; - வாய்ந்துடனே
|
180 |
ஏய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால்
தேய்ந்து துடித்தச் செழும்பவளம் - காய்ந்திலங்கு
|
181 |
முத்தமும் தேனும் பொதிந்து முனிவரையும்
சித்தம் திறைகொள்ளும் செவ்வாயாள் - ஒத்து
|
182 |
வரிகிடந்(து) அஞ்சனம் ஆடி மணிகள்
உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
|
183 |
தண்ணங் கயலுஞ் சலஞ்சலமும் தோன்றுதலால்
வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த
|
184 |
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய
மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
|
185 |
யோசனை நாறும் குழலாள் ஒளிநுதல்மேல்
வாசிகை கொண்டு வடிவமைத்தாள்; - மாசில்சீர்ப்
|
186 |
பாதாதி கேசம் பழிப்பிலாள்; பாங்கமைந்த
சீதாரி கொண்டுதன் மெய்புகைத்தாள்; - மாதார்ந்த
|
187 |
பண்கவரும் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர்
வெண்கவரி வெள்ளத் திடையிருந்து - ஒண்கேழ்நல்
|
188 |
கண்அவனை அல்லாது காணா செவியவன(து)
எண்ணருஞ்சீர் அல்ல(து) இசைகேளா - அண்ணல்
|
189 |
கழலடி யல்லது கைதொழா அஃதால்
அழலங்கைக் கொண்டான்மாட் டன்புஎன் - றெழிலுடைய
|
190 |
வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர்
கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன் - விண்பால்
|
191 |
அரிஅரணஞ் செற்றாங்(கு) அலைபுனலும் பாம்பும்
புரிசடைமேல் வைத்த புராணன் - எரிஇரவில்
|
192 |
ஆடும் இறைவன், அமரர்குழாம் தற்சூழ
மாட மறுகில் வரக்கண்டு - கேடில்சீர்
|
193 |
வண்ணச் சிலம்படி மாதரார் தாம்உண்ட
கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான் - அண்ணலே
|
194 |
வந்தாய்; வளைகவர்ந்தாய்; மாலும் அருந்துயரும்
தந்தாய் இதுவோ தகவுஎன்று - நொந்தாள்போல்
|
195 |
கட்டுரைத்துக் கைசோர்ந்து அகமுருகி மெய்வெளுத்து
மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள் - கொட்டிமைசேர்
|
196 |
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோள் செந்துவர்வாய்ப்
பெண்ஆர வாரம் பெரிதன்றே - விண்ணோங்கி
|
197 |
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலா வீற்றிருந்த
செஞ்சடையான் போந்த தெரு.
பெண்ணீர்மை காமின்; பெருந்தோளி ணைகாமின்;
உண்ணீர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணீரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன்
ஊரேறு போந்த துலா.
|