பூவார் திருநுதல்மேல் பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை சிலம்பரற்ற - ஓவா(து)
அழுவான் ‘பசித்தான்’ என்(று) ஆங்(கு) இறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்கும் தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமும் செய்தாள் முதிராத
செப்பொத்த கொங்கைத் திருநுதலி - அப்பன்
அருளாலே ஊட்டுதலும், அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற செம்மல்; - இருள் தீர்ந்த
2. திருப்பதிகம் அருளிச் செய்தல்
காழி முதல்வன், கவுணியர்தம் போர்ஏறு,
10
‘ஊழி முதல்வன் உவன்’ என்று காட்ட வலான்
3. படிக்காசு பெற்றது
வீழி மிழலைப் படிக்காசு கொண்டபிரான்;
4. சமணர் கழுவேற நின்றது
பாழி அமணைக் கழுவேற்றினான்; பாணர்
5. யாழ் மூரிப்பதிகம் பாடியது
யாழை முரித்தான்; (எரிவாய் இடும் பதிகம்
6. நெருப்பில் ஏட்டையிட்டுப் பச்சென்றிருக்கக் காட்டியது
ஆழி உலகத்(து) அழியாமற் காட்டினான்.
7. இசை வல்லான்
15 ஏழிசை வித்தகன்; (வந்(து) ஏனோரும் வானோரும்
8. பாலை நெய்தல் பாடியது
தாழும் சரணச் சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும் பாடவலான்; சோலைத்
9. பொற்கிழி பெற்றது
திருவா வடுது றையில் செம்பொற் கிழிஒன்(று)
அருளாலே பெற்றருளும் ஐயன்; தெருளாத
10. பாண்டிய நாட்டில் நீற்றொளிபரப்பியது
20 தென்னவன்நா டெல்லாம் திருநீறு பாலித்த
11. விடம் தீர்த்தது
மன்னன்;) மருகல்விடம் தீர்த்தபிரான்; (பின்னைத்தென்
12. பொற்றாளம் பெற்றது
கோலக்கா வில்தாளம் பெற்று(இக்) குவலயத்தில்
13. முத்துச் சிவிகைபெற்றது
முத்தின் சிவிகை அரன் கொடுப்ப,முன்னின்று
25 தித்தித்த பாடல் செவிக்களித்தான்; (நித்திலங்கள்
14. மறைக் கதவம் அடைத்தது
மாடத் தொளிரும் மறைக்காட் டிறை கதவைப்
பாடி அடைப்பித்த பண்புடையான்; (நீடும்
15. ஆண்பனை பெண்பனை யாக்கியது
திருவோத்தூர்ஆண்பனையைப் ‘பெண்பனைஆ’ கென்னும்
பெருவார்த்தை தான்உடைய பிள்ளை; (மருவினிய
16. ஓடம் கரையேறவிட்டது
30
கொள்ளம்பூ தூர்க்குழகன் நாவா யது கொடுப்ப
உள்ளமே கோலாகஊன்றினான்; (வள்ளல்
17. முயலகன் தீர்த்தது
மழவன் சிறு மதலை வான்பெருநோய் தீர்த்த
குழகன்; குலமறையோர் கோமான்; (நிலவிய
18. ஆற்றில் எடு எதிர்ஏற விட்டது
வைகைஆற்(று) ஏ(டு)இட்டு வான்நீர் எதிர்ஓட்டும்
35 செய்கையான் மிக்க செயலுடையான்; (வெய்யவிடம்
19. எலும்பைப் பெண்ணாக்கியது
மேவி இறந்த அயில் வேற்கண் மடமகளை
வாவென்(று) அழைப்பித்(து) இம் மண்ணுலகில் - வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச் செயலுடையான்; (நேர்வந்த
20. புத்தன் தலையில் இடிவிழச் செய்தது
புத்தன் தலையைப் புவிமேல் புரளவித்த
40 வித்தகப் பாடல் விளம்பினான்; (மொய்த்தொளிசேர்
கொச்சைச் சதுரன்; தன் கோமானைத் தான் செய்த
பச்சைப் பதிகத் துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை விளக்க வலபெருமான்
முத்திப் பகவ முதல்வன் திருவடியை
45 அத்திக்கும் பத்தர்எதிர் ஆணைநம தென்னவலான்;
தத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்,
21. அமணர் இட்ட தீயைப் பாண்டியன்மேல் ஏவியது
பத்திச் சிவம்’ என்று பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதிர்வேற் குலச்சிறையும் கொண்டாடும்
50
அற்றைப் பொழுதத்(து) அமணர்இடும் வெந்தீயைப்
‘பற்றிச் சுடுகபோய்ப் பாண்டியனை’ என்னவல்லான்; வர்த்தமா னீசர் கழல்வணங்கி வாழ் முருகன்
பத்தியை ஈசன் பதிகத்தே காட்டினான்;
அத்தன் திருநீல நக்கற்கும் அன்புடையான்;
55 துத்த மொழிக்குதலைத் தூயவாய் நன்னுதலி
‘நித்தில்லப்பூண் முலைக்கும், நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும், கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரைஅடிக்கும், அம்மென் குறங்கினுக்கும்,
சித்திரப்பொற் காஞ்சி சிறந்தபே ரல்குலுக்கும்
60
முத்தமிழ்நூல் எல்லாம் முழுதுணர்ந்த பிள்ளையார்க்(கு)
ஒத்த மணம் இது என்(று)ஓதித் தமர்களெல்லாம்
சித்தம் களிப்பத் திருமணம் செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக் கண்(டு)உட னே நிற்கப்
பெற்றவர்க ளோடும்போய்ப் புக்குத்தன்
65 அத்தன் அடியே அடைந்தான் அழகிதே.