பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கைக்குவான் முத்தின் சரிவளை பெய்து கழுத்தில்ஓர் தனிவடங் கட்டி முக்கண்நா யகராய்ப் பவனிபோந் திங்ஙன் முரிவதோர் முரிவுமை யளவும் தக்கசீர்க் கங்கை யளவும்அன் றென்னோ தம்மொருப் பாடுல கதன்மேல் மிக்கசீர் ஆரூர் ஆதியாய் வீதி வீடங்கராய் நடங்குலா வினரே
பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப் பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா இருக்கும், தேவர்காள், இவர்தம் திருவுரு இருந்தவா பாரீர் ! சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி விடங்கராய் நடங்குலா வினரே.