பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர் விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே!
அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன- நடை மடமங்கை ஒர்பாகம் நயந்து, விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய சடை அமர் வெண்பிறைச் சங்கரனீரே!
வளம் கிளர் கங்கை மடவரலோடு களம் பட ஆடுதிர், காடு அரங்கு ஆக; விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய இளம்பிறை சேர் சடை எம்பெருமானே!
சுரிகுழல் நல்ல துடியிடையோடு பொரி புல்கு காட்டு இடை ஆடுதிர், பொங்க; விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய எரி மழுவாள் படை எந்தைபிரானே!
காவி அம் கண் மடவாளொடும் காட்டு இடைத் தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன்மலர் மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே!