பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம் மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம் மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம் மானுடர் ஆக்கை வடிவு திருக் கூத்தே.
உலந்து இலர் பின்னும் உளர் என நிற்பர் நிலம்தரு நீர் தெளி ஊன் அவை செய்யப் புலம் தரு பூதங்கள் ஐந்தும் ஒன்று ஆக வலம் தரு தேவரை வந்தி செய்யீரே.
கோயில் கொண்டு அன்றே குடிகொண்ட ஐவரும் வாயில் கொண்டு ஆங்கே வழிநின்று அருளுவர் தாயில் கொண்டால் போல் தலைவன் என் உள் புக வாயில் கொண்டு ஈசனும் ஆள வந்தானே.
கோயில் கொண்டான் அடி கொல்லைப் பெருமறை வாயில் கொண்டான் அடி நாடிகள் பத்து உள பூசை கொண்டான் புலன் ஐந்தும் பிறகு இட்டு வாயில் கொண்டான் எங்கள் மா நந்தி தானே.