பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

ஏழாம் தந்திரம் / அசற்குரு நெறி
வ.எண் பாடல்
1

உணர்வு ஒன்று இலா மூடன் உண்மை ஓராதோன்
கணு இன்றி வேத ஆகம நெறி காணான்
பணி ஒன்று இலா தோன் பர நிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசல் குரு ஆமே.

2

மந்திர தந்திர மா யோக ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்
சிந்தனை செய்யாத் தெளிவுயாது ஊண் பொருள்
அந்தகர் ஆவோர் அசல் குரு ஆமே.

3

ஆம் ஆறு அறியாதோன் மூடன் அதி மூடன்
காம ஆதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமா அசத்து அறிவிப்போன் அறிவு இலோன்று
கோமான் அலன் அசனத்து ஆகும் குரவனே.

4

கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தன் பாவம் குன்றும் தனக்கே பகை ஆகும்
நற் பால் அரசுக்கும் நாட்டுக்கும் கேடு என்றே
முற்பாலே நந்தி மொழிந்து வைத்தானே.

5

குருடர்க்குக் கோல் காட்டிச் செல்லும் குருடர்
முரணும் பழம் குழி வீழ்வார்கள் முன்பின்
குருடரும் வீழ்வார்கள் முன் பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோடு ஆகியே.