பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஓதும் மயிர்க்கால் தொறும் அமுது ஊறிய பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம் ஆதி சொரூபங்கள் மூன்று அகன்று அப்பாலை வேதம் அது ஓதும் சொரூபி தன் மேன்மையே.
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க் கந்தம் துன்னி நின்றானே.
இணங்க வேண்டா இனி உலகோருடன் நுணங்கு கல்வியும் நூல்களும் என்செயும் வணங்க வேண்டா வடிவை அறிந்தபின் பிணங்க வேண்டா பிதற்றை ஒழியுமே.
துன்னி நின்றான் தன்னை உன்னி முன்னா இரு முன்னி அவர் தம் குறையை முடித்திடும் மன்னிய கேள்வி மறையவன் மாதவன் சென்னியுள் நின்றது ஓர் தேற்றத்தன் ஆமே.
மின் உற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும் தன் உற்ற சோதித் தலைவன் இணை இலி பொன் உற்ற மேனிப் புரிசடை நந்தியும் என் உற்று அறிவான் என் விழித்தானே.
சத்திய ஞானத் தனிப் பொருள் ஆனந்தம் சித்தத்தின் இல்லாச் சிவ ஆனந்தப் பேர் ஒளி சுத்தப் பிரம துரியம் துரியத்துள் உய்த்த துரியத்து உறு பேர் ஒளியே.
பரன் அல்ல நீடும் பரா பரன் அல்ல உரன் அல்ல மீது உணர் ஒண் சுடர் அல்ல தரன் அல்ல தான் அவையாய் அல்ல ஆகும் அரன் அல்ல ஆனந்தத்து அப்புறத்தாணே.
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன் பத்தியுள் நின்று பரம் தன்னுள் நின்று மா சத்தியுள் நின்றோர்க்குத் தத்துவம் கூடலால் சுத்தி அகன்றோர் சுக ஆனந்த போதமே.
துரிய அதீதம் சொல் அறும் பாழ் ஆம் அரிய துரியம் அதீதம் புரியில் விரியும் குவியும் விள்ளாம் மிளிரும் தன் உருவும் திரியும் உரைப்பது எவ்வாறே.