பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தான் வரை அற்ற பின் ஆரை வரைவது தான் அவன் ஆன பின் ஆரை நினைவது காமனை வென்ற கண்ணாரை உகப்பது தூ மொழி வாசகம் சொல்லுமின் நீரே.
உரை அற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள் கரை அற்றது ஒன்றைக் கரை காணல் ஆகுமோ திரை அற்ற நீர் போல் சிந்தை தெளிவார்க்குப் புரை அற்று இருந்தான் புரிசடை யோனே.
மன மாயை மாயை இம் மாயை மயக்க மன மாயை தான் மாய மற்று ஒன்றும் இல்லை பினை மாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே.