பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அஞ்சன மேனி அரிவை ஓர் பாகத்தன் அஞ்சொடு இருபத்து மூன்று உள ஆகமம் அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும் அஞ்சா முகத்தில் அரும் பொருள் கேட்டதே.
அண்ணல் அருளால் அருளும் சிவா ஆகமம் எண்ணில் இருபத்து எண் கோடி நூறு ஆயிரம் விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர் எண்ணி நின்ற அப் பொருள் ஏத்துவன் யானே.
அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
பரனாய்ப் பரா பரம் காட்டி உலகில் அரனாய்ச் சிவ தன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கும் நந்தி உரன் ஆகி ஆகமம் ஓங்கி நின்றானே.
சிவம் ஆம் பரத்தினில் சத்தி சதாசிவம் உவமா மகேசர் உருத்திர தேவர் தவ மால் பிரமீசர் தம்மில் தாம் பெற்ற நவ ஆகமம் எங்கள் நந்தி பெற்றானே.
பெற்ற நல் ஆகமம் காரணம் காமிகம் உற்ற நல் வீரம் உயர் சித்தம் வாதுளம் மற்று அவ் வியாமளம் ஆகும்கால் ஓத்தரந்து உற்ற நல் சுப்பிரம் சொல்லு மகுடமே.
ஆகமம் ஒன்பான் அதில் ஆன நால் ஏழு மேகம் இல் நால் ஏழு முப்பேதம் உற்று உடன் வேகம் இல் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை ஒன்று ஆக முடிந்த அரும் சுத்த சைவமே.