பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பற்று ஆய நல்குரு பூசைக்கும் பல்மலர் மற்று ஓர் அணுக்களைக் கொல்லாமை ஒண் மலர் நற்றார் நடுக்கு அற்ற தீபமும் சித்தமும் உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே.
கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக் கயிற்றால் கட்டிச் செல்லிடு நில் என்று தீவாய் நரகு இடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.