பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கருத்துறை அந்தகன் தன்போல் அசுரன் வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம் வருத்தம் செய்தான் என்றும் வானவர் வேண்டக் குருத்து உயர் சூலம் கைக் கொண்டு கொன்றானே.
கொலையில் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித் தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே.
எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும் தங்கும் படித் தவன் தாள் உணர் தேவர்கள் பொங்கும் சினத்துள் அயன் தலை முன் அற அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.
எங்கும் கலந்தும் என் உள்ளத்து எழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதிபால் பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின் அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.
அப்பணி செம்சடை ஆதி புராதனன் முப்புரம் செற்றனன் என்பார்கள் மூடர்கள் முப்புரம் ஆவது மும் மலக் காரியம் அப்புரம் எய்தமை யார் அறிவாரே.
முத் தீக் கொளுவி முழங்கு எரி வேள்வியுள் அத்தி உரி அரன் ஆவது அறிகிலர் சத்தி கருதிய தாம் பல தேவரும் அத்தீயின் உள் எழுந்தன்று கொலையே.
மூலத் துவாரத்து மூளும் ஒருவனை மேலைத் துவாரத்து மேல் உற நோக்கி முன் கால் உற்றுக் காலனைக் காய்ந்து அங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
இருந்த மனத்தை இசைய இருத்திப் பொருந்தி இலிங்க வழியது போக்கித் திருந்திய காமன் செயல் அழித்து அம்கண் அரும்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே.