பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம் கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம் மேல் போக வெள்ளி மலை அமரர்பதி பார் போகம் ஏழும் படைத்து உடையானே.
சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால் மிக்கரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத் தக்க நல் சத்தியைத் தான் கூறு செய்ததே
கூறதுவாகக் குறித்து நல் சக்கரம் கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக் கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக் கூறது செய்து தரித்தனன் கோலமே.
தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர்பால் தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும் சக்கரம் தன்னைச் சசி முடிமேல் விட அக்கி உமிழ்ந்தது வாயுக் கரத்திலே.