பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / பாத்திரம்
வ.எண் பாடல்
1

திலம் அத்தனையே சிவ ஞானிக்கு ஈந்தால்
பல முத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலம் அத்தனை பொன்னை நின் மூடர்க்கு ஈந்தால்
பலமும் அற்றே பர போகமும் குன்றுமே.

2

கண்டு இருந்து ஆர் உயிர் உண்டிடும் காலனைக்
கொண்டு இருந்து ஆர் உயிர் கொள்ளும் குணத்தனை
நன்று உணர்ந்தார்க்கு அருள் செய்திடும் நாதனைச்
சென்று உணர்ந்தார் சிலர் தேவரும் ஆமே.

3

கை விட்டிலேன் கருவாகிய காலத்து
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய் விட்டு நானே புரிசடையான் அடி
நெய் விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே.

4

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டத்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளம் கிளையோனே.