பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கோல வறட்டைக் குனிந்து குளகு இட்டுப் பாலைக் கறந்து பருகுவதே ஒக்கும் சீலமும் நோன்பும் இலாதவர்க்கு ஈந்து காலம் கழிந்த பயிர் அது ஆகுமே.
ஈவது யோக இயம நியமங்கள் சார்வது அறிந்து அன்பு தங்கும் அவர்க்கு அன்றி ஆவது அறிந்து அன்பு தங்காதவர்களுக்கு ஈவ பெரும் பிழை என்று கொளீரே.
ஆம் ஆறு அறியான் அதி பஞ்சபாதகன் தோம் ஆறும் ஈசற்கும் தூய குரவற்கும் காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன் போமா நரகில் புகான் போதம் கற்கவே.
மண் மலை யத்தனை மாதனம் ஈயினும் அண்ணல் இவன் என்றே அஞ்சலி அத்தனாய் எண்ணி இறைஞ்சா தார்க்கு ஈந்த இருவரும் நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.