பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / திருக்கோயில்
வ.எண் பாடல்
1

தாவர லிங்கம் பறித்து ஒன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே அரசு நிலை கெடும்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடும்
காவலன் பேர் நந்தி கட்டு உரைத்தானே.

2

கட்டு வித்தார் மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டு விக்கும் அபிடேகத்து அரசரை
முட்டு விக்கும் முனி வேதியர் ஆயினும்
வெட்டு வித்தே விடும் விண்ணவன் ஆணையே.

3

ஆற்ற அரு நோய் மிக்கு அவனி மழை இன்றிப்
போற்ற அரு மன்னரும் போர் வலி குன்றுவர்
கூற்று உதைத்தான் திருக் கோயில்கள் எல்லாம்
சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.

4

முன்னவனார் கோயில் பூசைகள் முட்டிடின்
மன்னர்க்குத் தீங்கு உள வாரி வளம் குன்றும்
கன்னம் களவு மிகுந்திடும் காசினி
என் அரு நந்தி எடுத்து உரைத்தானே.

5

பேர் கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்
போர் கொண்ட நாட்டுக்குப் பொல்லா வியாதியாம்
பார் கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்து உரைத்தானே.