பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற பேர் அறிவாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூ உலகு ஆளி இலங்கு எழுந்து தாரணி நால் வகைச் சைவமும் ஆமே.
சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கண்டு சித்தும் அசித்தும் சேர் உறாமே நீத்த சுத்தம் அசுத்தமும் தோய் உறாமே நின்று நித்தம் பரஞ் சுத்தம் சைவர்க்கு நேயமே.
கற்பன கற்றுக் கலை மன்னும் மெய் யோகம் முற்பத ஞான முறை முறை நண்ணியே சொற் பதம் மேவித் துரிசு அற்று மேல் ஆன தற்பரம் கண்டு உளோர் சைவ சிந்தாந்தரே.
வேதாந்தம் சுத்தம் விளங்கிய சித்தாந்த நாதாந்தம் கண்டோர் நடுக்கு அற்ற காட்சியர் பூதாந்த போதாந்தம் ஆகப் புனம் செய்ய நாதாந்த பூரணர் ஞான நேயத்தரே.