பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசை உயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசை உயிர் பெறு ஆவாகனம் புறப் பூசை செயின் கடை நேசம் சிவ பூசை ஆமே.
நாடு நகரமும் நல் திருக் கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின் கூடிய நெஞ்சத்துக் கோயிலாய்க் கொள்வனே.
பத்தர் சரிதை படுவோர் கிரியை ஓர் அத்தகு தொண்டர் அருள் வேடத்து ஆகுவோர் சுத்தவியம் ஆதி சாதகர் தூ யோகர் சித்தர் சிவஞானம் சென்று எய்து வோர் களே.
சார்ந்த மெய்ஞ் ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் சேர்ந்த வெண் யோகத்தர் சித்தர் சமாதியோர் ஆய்ந்த கிரியையோர் அருச்சனை தப்பாதோர் நேர்ந்த சரியை யோர் நீள் நிலத்தோரே.
கிரியை யோகங்கள் கிளர் ஞான பூசை அரிய சிவன் உரு அமரும் அரூபம் தெரியும் பருவத்துத் தேர்ந்திடும் பூசை உரியன நேயத்து உயர் பூசை ஆமே.
சரி ஆதி நான்கும் தரு ஞானம் நான்கும் விரிவு ஆன வேதாந்த சித்தாந்தம் ஆறும் பொருள் ஆனது நந்தி பொன் நகர் போந்து மருள் ஆகும் மாந்தர் வணங்க வைத்தானே.
சமையம் பல சுத்தித் தன் செயல் அற்றிடும் அமையும் விசேடமும் அரன் மந்திர சுத்தி சமைய நிருவாணம் கலா சுத்தி ஆகும் அமை மன்னும் ஞான மார்க்கம் அபிடேகமே.