திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா
விகிர்தனை, விழவு ஆரும்
மண்களார் துதித்து அன்பராய் இன்பு உறும் வள்ளலை,
மருவி, தம்
கண்கள் ஆர்தரக் கண்டு, நம் கடிக்குளத்து உறைதரு
கற்பகத்தைப்
பண்கள் ஆர்தரப் பாடுவார் கேடு இலர்; பழி இலர்; புகழ்
ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி