ஒளி கொள் வாள் எயிற்று அரக்கன் அவ் உயர்வரை
எடுத்தலும், உமை அஞ்சி,
சுளிய ஊன்றலும், சோர்ந்திட, வாளொடு நாள் அவற்கு
அருள் செய்த
குளிர் கொள் பூம்பொழில் சூழ்தரு கோட்டூர்
நற்கொழுந்தினைத் தொழுவார்கள்,
தளிர் கொள் தாமரைப்பாதங்கள் அருள்பெறும் தவம்
உடையவர் தாமே.