நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர் அவை
வாரி
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை,
அன்று அங்கு
அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன்,
வரைவில்லால்
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல்
பணிவோமே.