“ஒருமை பெண்மை உடையன்! சடையன்! விடை ஊரும்(ம்)
இவன்!” என்ன
அருமை ஆக உரை செய்ய அமர்ந்து, எனது உள்ளம்
கவர் கள்வன்-
“கருமை பெற்ற கடல் கொள்ள, மிதந்தது ஒர் காலம் இது” என்னப்
பெருமை பெற்ற பிரமாபுரம் மேவிய பெம்மான்-இவன் அன்றே!