"குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார்,
புறம் கூற,
வெண்தலையில் பலி கொண்டல் விரும்பினை" என்று விளம்பி,
வண்டு அமர் பூங்குழல் மங்கை ஒர் பாகம் ஆயவன் வாழ்கொளிபுத்தூர்,
தொண்டர்கள் மா மலர் தூவ, தோன்றி நின்றான் அடி சேர்வோம்.