பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் காணீர் சிவன் அவன் தாள் களே.
ஞானம் இல்லார் வேடம் பூண்டு இந்த நாட்டு இடை ஈனம் அதே செய்து இரந்து உண்டு இருப்பினும் மானம் நலம் கெடும் வையகம் பஞ்சம் ஆம் ஈனவர் வேடம் கழிப்பித்தல் இன்பமே.
இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்து உள்ள நன் செயல் புன் செயலால் அந்த நாட்டிற்கு ஆம் என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில் மன் பதை செப்பம் செயின் வையம் வாழுமே.
இழிகுலத்தோர் வேடம் பூண்பர் மேல் எய்த வழி குலத்தோர் வேடம் பூண்பர்தே ஆகப் பழிகுலத்து ஆகிய பாழ் சண்டர் ஆனார் கழி குலத்தோர்கள் களையப் பட்டோரே.
பொய்த்தவம் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவம் செய்தவர் புண்ணியர் ஆகார் ஏல் பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் சத்திய ஞானத்தால் தங்கும் தவங்களே.
பொய் வேடம் பூண்பர் பொசித்தல் பயன் ஆக மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சைகைக் கொள்வர் பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் உய் வேடம் ஆகும் உணர்ந்து அறிந்தோர்க்கே.