பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அருளில் தலை நின்று அறிந்து அழுந்தா தார் அருளில் தலை நில்லார் ஐம் பாசம் நீங்கார் அருளில் பெருமை அறியார் செறியார் அருளில் பிறந்திட்டு அறிந்து அறிவாரே.
வாரா வழி தந்த மா நந்தி பேர் நந்தி ஆரா அமுது அளித்தான் நந்தி பேர் நந்தி பேர் ஆயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில் ஆரா அருள் கடல் ஆடுக என்றானே.
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும் தேடியும் கண்டேன் சிவன் பெரும் தன்மையைக் கூடிய வாறே குறியா குறி தந்து என் ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.
உற்ற பிறப்பும் உறுமலம் ஆனதும் பற்றிய மாயாப் படலம் எனப் பண்ணி அத்தனை நீ என்று அடி வைத்தான் பேர் நந்தி கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே.
விளக்கினை ஏற்றி வெளியை அறிமின் விளக்கின் முன்னே வேதனை மாறும் விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள் விளக்கில் விளங்கும் விளக்கு அவர் தாமே.
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளி உளோர்க்கு அன்றோ ஒழியாது ஒளியும் ஒளி இருள் கண்ட கண் போல வேறாய் உள் ஒளி இருள் நீங்க உயிர் சிவம் ஆமே.
புறமே திரிந்தேனைப் பொன் கழல் சூட்டி நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த திறம் ஏது என்று எண்ணித் திகைத்து இருந்தேனே.
அருள் அது என்ற அகல் இடம் ஒன்றும் பொருள் அது என்ற புகல் இடம் ஒன்றும் மருள் அது நீங்க மனம் புகுந்தானைத் தெருள் உறும் பின்னைச் சிவகதி ஆமே.
கூறுமின் நீர் முன் பிறந்து இங்கு இறந்தமை வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப் பொருள் நீக்கிடும் பார் அணியும் உடல் வீழ விட்டு ஆர் உயிர் தேர் அணிவோம் இது செப்ப வல்லீரே.