பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
எப்பாழும் பாழும் யாவும் ஆய் அன்றாகி முப்பாழும் கீழ் உள முப்பாழும் முன்னியே இப்பாழும் இன்னவாறு என்பதில் இலா இன்பத்து தற்பர ஞான ஆனந்தம் தான் அது ஆகுமே.
மன்னும் சத்தி ஆதி மணி ஒளி மாசோபை அன்னதோடு ஒப்பமிடல் ஒன்றாம் ஆறது இன்னிய வுற்பலம் ஒண்சீர் நிறமணம் பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
சத்தி சிவன் பரஞானமும் சாற்றும் கால் உய்த்த அனந்தம் சிவம் உயர் ஆனந்தம் வைத்த சொரூபத்த சத்தி வரு குரு உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
உருஉற் பலம் நிறம் ஒண் மணம் சோபை தரநிற்ப போல் உயிர் தற்பரம் தன்னில் மருவச் சிவம் என்ற மா முப் பதத்தின் சொரு பத்தன் சத்தி ஆதி தோன்ற நின்றானே.
நினையும் அளவின் நெகிழ வணங்கிப் புனையில் அவனைப் பொதியலும் ஆகும் எனையும் எம்கோன் நந்தி தன் அருள் கூட்டி நினையும் அளவில் நினைப் பித்தனனே.
பாலொடு தேனும் பழத்து உள் இரதமும் வாலிய பேர் அமுதாகும் மதுரமும் போலும் துரியம் பொடி பட உள் புகச் சீலம் மயிர்க்கால் தொறும் தேக்கிடுமே.
அமரத்துவம் கடந்து அண்டம் கடந்து தமரத்து நின்ற தனிமையன் ஈசன் பவளத்து முத்தும் பனிமொழி மாதர் துவள் அற்ற சோதி தொடர்ந்து நின்றானே.
மத்திமம் ஆறு ஆறு மாற்றி மலம் நீக்கிச் சுத்தம் அது ஆகும் துரியத்து துரிசு அற்றுப் பெத்தம் அறச் சிவம் ஆகிப் பிறழ் உற்றுச் சத்திய ஞான ஆனந்தம் சார்ந்தனன் ஞானியே.
சிவம் ஆய் அம் ஆன மும் மலம் தீரப் பவம் ஆன முப்பாழைப் பற்று அறப் பற்றத் தவம் ஆன சத்திய ஞான ஆனந்தத்தே துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே.