பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஓதிய முத்தி அடைவே உயிர் பர பேதம் இல் அச் சிவம் எய்தும் துரியமோடு ஆதி சொரூபம் சொரூபத்தது ஆகவே ஏதம் இலா நிருவாணம் பிறந்தவே.
பற்று அற்றவர் பற்றி நின்ற பரம் பொருள் கற்று அற்றவர் கற்றுக் கருதிய கண்நுதல் சுற்று அற்றவர் சுற்றி நின்ற என் சோதியை பெற்று உற்றவர்கள் பிதற்று ஒழிந்தாரே.
சித்தம் சிவமாம் சிவஞானி சேர்விடம் சத்தச் சிவாலயம் தொல் பாச நாசமாம் அத்த மழையகம் அனந்த மேலிடும் முத்தம் பெருகும் முழுப் பொருள் ஆகுமே.
ஆணவ மூலத்து அகாரம் உதித்திடப் பேணி உகாரம் கலாதி பிறிவிக்கத் தாணு மகாரம் சதாசிவம் ஆகவே ஆணவ பாசம் அடர்தல் செய்யா அன்றே.
நெற்றி நடுவுள் நினைவு எழு கண்டமும் உற்ற விதையமும் ஓதிய நாபிக்கீழ்ப் பெற்ற துரியமும் பேசிய மூலத்தே உற்ற அதீதம் ஒடுங்கும் உடன் அன்றே.