பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப் பட்டார்களும் அன்பு இலர் ஆனார் கொடை இல்லை கோள் இல்லை கொண்டாட்டம் இல்லை நடை இல்லை நாட்டில் இயங்கு கின்றார் கட்கே.
பொய்க்குழி தூர்ப்பான் புலரி புலருது என்று அக்குழி தூர்க்கும் அரும் பண்டம் தேடுவீர் எக்குழி தூர்த்தும் இறைவனை ஏத்துமின் அக்குழி தூரும் அழுக்கு அற்ற போதே.
கல்குழி தூரக் கனகமும் தேடுவர் அக்குழி தூர்க்கை யாவர்க்கும் அரியது அக்குழி தூர்க்கும் அறிவை அறிந்தபின் அக்குழி தூரும் அழுக்கு அற்றவாறே.
தொடர்ந்து எழு சுற்றம் வினையினும் தீய கடந்தோர் ஆவி கழிவதன் முன்னே உடந்து ஒரு காலத்து உணர் விளக்கு ஏற்றித் தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.
அறுத்தன ஆறினும் ஆன் இனம் மேவி அறுத்தனர் ஐவரும் எண் இலி துன்பம் ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல வாழ்வை வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே.