பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர் நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.
நடுவு நின்றான் நல்ல கார் முகில் வண்ணன் நடுவு நின்றான் நல்ல நால் மறை ஓதி நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர் நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே.
நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர் நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர் நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர் நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.
தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே.