பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முதல் தந்திரம் / நடுவு நிலைமை
வ.எண் பாடல்
1

நடுவு நின்றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவு நின்றார்க்கு நரகமும் இல்லை
நடுவு நின்றார் நல்ல தேவரும் ஆவர்
நடுவு நின்றார் வழி யானும் நின்றேனே.

2

நடுவு நின்றான் நல்ல கார் முகில் வண்ணன்
நடுவு நின்றான் நல்ல நால் மறை ஓதி
நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவோர்
நடுவு நின்றார் நல்ல நம்பனும் ஆமே.

3

நடுவு நின்றார் சிலர் ஞானிகள் ஆவர்
நடுவு நின்றார் சிலர் தேவரும் ஆவர்
நடுவு நின்றார் சிலர் நம்பனும் ஆவர்
நடுவு நின்றாரொடு யானும் நின்றேனே.

4

தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன் அன்றி
ஏன்று நின்றார் என்றும் ஈசன் இணை அடி
மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை
நான்று நின்றார் நடு ஆகி நின்றாரே.