பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சக்தி சிவன் விளையாட்டால் உயிர் ஆக்கி ஒத்த இருமாயா கூட்டத்து இடை பூட்டிச் சுத்தம் அது ஆகும் துரியம் பிரிவித்துச் சித்தம் புகுந்து சிவ மயம் ஆக்குமே.
விஞ்ஞானர் நால்வரும் மெய்ப் பிரள யாகல் அத் தஞ்ஞானர் மூவரும் தாங்கு சகலத்தின் அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம் விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.
விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர் தஞ் ஞானர் அட்டவித் தேசராம் சார்ந்து உளோர் எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர் மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே.
இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை இரண்டாவது உள்ளே இருமல பெத்தர் இரண்டாகும் நூற்று எட்டு ருத்திரர் என்பர் முரண் சேர் சகலத்தர் மும்மலத்தாரே.
பெத்தத்த சித்தொடு பேண் முகத்தச் சித்து அது ஒத்திட்டு இரண்டிடை ஊடு உற்றார் சித்தும் ஆய் மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார் சத்கத்து அமிழ்ந்து சகலத்து உளாரே.
சிவம் ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர் அவம் ஆகார் சித்தர் முத் தாந் தத்து வாழ்வார் பவம் ஆன தீர்வோர் பசு பாசம் அற்றோர் நவம் ஆன தத்துவம் நாடிக் கண்டோரே.
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர் விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர் அஞ்ஞானர் அச் சகலத்தர் சகலராம் விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே.
விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டுப் போய் மெய்ஞ் ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே.
ஆண வந்துற்ற வவித்தா நனவு அற்றோர் காணிய விந்துவா நாத சகலாதி ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே சேண் உயர் சத்தி சிவ தத்துவம் ஆமே.