வேதமும், வேள்வியும், ஆயினார்க்கு; மெய்ம்மையும், பொய்ம்மையும், ஆயினார்க்கு;
சோதியும் ஆய், இருள் ஆயினார்க்கு; துன்பமும் ஆய், இன்பம் ஆயினார்க்கு;
பாதியும் ஆய், முற்றும் ஆயினார்க்கு; பந்தமும் ஆய், வீடும் ஆயினாருக்கு;
ஆதியும், அந்தமும், ஆயினாருக்கு; ஆட, பொற்சுண்ணம் இடித்தும், நாமே!