வெண் தலை மாலை விரவிப் பூண்ட மெய் உடையார், விறல்
ஆர் அரக்கன்
வண்டு அமர் முடி செற்று உகந்த மைந்தர், இடம் வளம் ஓங்கி,
எங்கும்
கண்டவர், சிந்தைக் கருத்தின் மிக்கார், "கதி அருள்!" என்று கை
ஆரக் கூப்பி,
பண்டு அலர் கொண்டு பயிலும் ஆவூர்ப் பசுபதியீச்சுரம் பாடு, நாவே!