திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பரனாய்ப் பராபரன் ஆகி அப்பால் சென்று
உரனாய் வழக்கு அற ஒண் சுடர் தானாய்த்
தரனாய் தனாது எனவாறு அறி ஒண்ணா
அரனாய் உலகில் அருள் புரிந்தானே.

பொருள்

குரலிசை
காணொளி