விடல் ஏறு படநாகம் அரைக்கு அசைத்து, வெற்பு அரையன்
பாவையோடும்
அடல் ஏறு ஒன்று அது ஏறி, "அம் சொலீர், பலி!" என்னும்
அடிகள் கோயில்
கடல் ஏறித் திரை மோதிக் காவிரியின் உடன் வந்து கங்குல் வைகி,
திடல் ஏறிச் சுரிசங்கம் செழு முத்து அங்கு ஈன்று அலைக்கும்
திரு ஐயாறே.