காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர்
கழுமலம், மாத் தோணிபுரம், சீர்
ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன் ஊர், இருங் கமலத்து
அயன் ஊர், இன்பம்
வாய்ந்த புறவம், திகழும் சிரபுரம், பூந்தராய், கொச்சை,
காழி, சண்பை
சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை
கெடுத்தோன் திகழும் ஊரே.