திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: நட்டராகம்

எங்கும் ஏதும் ஓர் பிணி இலர், கேடு இலர், இழை வளர்
நறுங்கொன்றை
தங்கு தொங்கலும் தாமமும் கண்ணியும் தாம் மகிழ்ந்தவர்,
மேய
மங்குல் தோய் பொழில், அரிசிலின் வடகரை, வருபுனல்
மாகாளம்,
கங்குலும் பகலும் தொழும் அடியவர் காதன்மை
உடையாரே.

பொருள்

குரலிசை
காணொளி