நீர் ஏறு சடைமுடி எம் நிமலன்தான்காண்;
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித்தான்காண்;
வார் ஏறு வனமுலையாள் பாகத்தான்காண்;
வளர்மதி சேர் சடையான்காண்; மாதேவன்காண்;
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான்காண்;
கல்லாலின்கீழ் அறங்கள் சொல்லினான்காண்-
சீர் ஏறு மணி மாடத் திரு ஆரூரில்-திரு
மூலட்டானத்து எம் செல்வன்தானே.