திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை,
புகலூரும் புறம்பயமும் மேயான் தன்னை,
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து தன்னை,
மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை,
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து
இனிது அமரும் பெருமானை, இமையோர் ஏத்த
அருளியனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து
அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!.

பொருள்

குரலிசை
காணொளி