சொல் மலிந்த மறைநான்கு ஆறு அங்கம் ஆகிச்
சொல் பொருளும் கடந்த சுடர்ச் சோதி போலும்;
கல் மலிந்த கயிலை மலைவாணர் போலும்; கடல்
நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்;
மல் மலிந்த மணி வரைத்திண் தோளர் போலும்;
மலை அரையன் மடப்பாவை மணாளர் போலும்;
கொன் மலிந்த மூ இலைவேல் குழகர் போலும்
குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே.