அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்பக் கண்டேன்;
அவ் அவர்க்கே ஈந்த கருணை கண்டேன்;
முடி ஆர் சடைமேல் அரவம் மூழ்க மூரிப்
பிறை போய் மறையக் கண்டேன்;
கொடி, ஆர், அதன்மேல் இடபம் கண்டேன்;
கோவணமும் கீளும் குலாவக் கண்டேன்;
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன்-
வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!.