முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கைத் தருக்கைக்
கரும்பு இன் கட்டிக்
கடிகையினால் எறி காட்டுப்பள்ளி காதலித்தான், கரிது ஆய கண்டன்,
பொடி அணி மேனியினானை உள்கி, போதொடு நீர் சுமந்து ஏத்தி,
முன் நின்று,
அடி கையினால் தொழ வல்ல தொண்டர் அருவினையைத்
துரந்து ஆட்செய்வாரே.