பண்ணு தலைப் பயன் ஆர் பாடலும், நீடுதலும்,- பங்கயமாது அனையார்,-பத்தியும்; “முத்தி அளித்து
எண்ணு தலைப்பெருமான்” என்று எழுவார் அவர் தம் ஏசறவும்(ம்); “இறை ஆம் எந்தையையும் விரவி
நண்ணுதலைப் படும் ஆறு எங்ஙனம்?” என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணுதலை, கனியை, காண்பதும்; என்றுகொலோ? கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே .