பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஏறிய வாறே மலம் ஐந்து இடை அடைத்து ஆறிய ஞானச் சிவோகம் அடைந்திட்டு வேறும் என முச் சொரூபத்து வீடு உற்று அங்கு ஈறு அதில் பண்டைப் பரன் உண்மை செய்யுமே.
மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியைக் காண்டலும் காயக் கணக்கு அற்ற வாறே.
உலகம் புடை பெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர் அறிவாரே.
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருஉரு ஆகிக் குருவாய் வரும் சத்தி கோன் உயிர்ப் பன்மை உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே.
மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணி எனல் ஆய் நின்றவாறு அது போலத் தணி முச்சொருப ஆதி சத்தி ஆதி சாரப் பணி வித்த பேர் நந்தி பாதம் பற்றாயே.
கல் ஒளி மா நிறம் சோபைக் கதிர் தட்ட நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் சொல் அறு முப் பாழில் சொல் அறு பேர் ஊரைத்து அதல் அறு முத்திராம் அந்தத்து அனு பூதியே.
உடந்த செந்தாமரை உள் உறு சோதி நடந்த செந்தாமரை நாத அம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்து அவ் விடம் தரு வாசலை மேல் திறவீரே.