பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும் எம் ஈசன் தனக்கு என்றே உள்கிக் குவியும் குருமடம் கண்டவர் தாம் போய்த் தளிரும் மலர் அடி சார்ந்து நின்றாரே.
இவன் இல்லம் அல்லது அவனுக்கு அங்கு இல்லை அவனுக்கும் வேறு இல்லம் உண்டா அறியின் அவனுக்கு இவன் இல்லம் என்று என்று அறிந்தும் அவனைப் புறம்பு என்று அரற்று கின்றாரே.
நாடும் பெரும் துறை நான் கண்டு கொண்டபின் கூடும் சிவனது கொய் மலர்ச் சேவடி தேட அரியன் சிறப்பு இலி எம் இறை ஓடும் உலகு உயிராகி நின்றானே
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா இரு நிலத்தோர்க்கே.
முகம் பீடம் ஆம் மடம் உன்னிய தேயம் அகம் பர வர்க்கமே ஆசு இல் செய் காட்சி அகம் பரம் ஆதனம் எண் எண் கிரியை சிதம்பரம் தற்குகை ஆதாரம் தானே.
ஆக முகம் ஆம் பீடம் ஆதாரம் ஆகும் சக முகம் ஆம் சத்தி ஆதனம் ஆகும் செகமுகம் ஆம் தெய்வமே சிவம் ஆகும் அக முகம் ஆய்ந்த அறிவு உடையோர்க்கே.
மாயை இரண்டு மறைக்க மறை உறும் காயம் ஓர் ஐந்தும் கழியத் தான் ஆகியே தூய பரம் சுடர் தோன்றச் சொரூபத்து உள் ஆய் பவர் ஞான ஆதி மோனத்தர் ஆமே.