பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தெற்கு வடக்குக் கிழக்கு மேற்கு உச்சியில் அற்புதம் ஆனது ஓர் அஞ்சு முகத்திலும் ஒப்பு இல் பேர் இன்பத்து உபய உபயத்துள் தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.
அடியார் அரன் அடி ஆனந்தம் கண்டோர் அடியார் ஆனவர் அத்தர் அருள் உற்றோர் அடியார் பவரே அடியவர் ஆம் ஆல் அடியார் பொன் அம்பலத்து ஆடல் கண்டாரே.
அடங்காத என்னை அடக்கி அடி வைத்து இடம் காண் பர ஆனந்தத்தே என்னை இட்டு நடந்தான் செயும் நந்தி நல் ஞானக் கூத்தன் படம்தான் செய்து உள் உடனே படிந்து இருந்தானே.
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச் செம்பொன் திரு மன்றுள் சேவகக் கூத்தனைச் சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை இன்பு உற நாடி என் அன்பில் வைத்தேனே.
மாணிக்கக் கூத்தனை வண் தில்லைக் கூத்தனைப் பூண் உற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச் சேண் உற்ற சோதிச் சிவ ஆனந்தக் கூத்தனை ஆணிப் பொன் கூத்தனை யார் உரைப் பாரே.
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும் தம்மையும் தாம் அறியார்கள் சதுர் கெடும் செம்மை சிறந்த திரு அம்பலக் கூத்துள் அம் மலர்ப் பொன் பாதத்து அன்பு வைப்பார் கட்கே.
தேட்டு அறும் சிந்தை திகைப்பு அறும் பிண்டத்து உள் வாட்டு அறும் கால் புந்தி ஆகி வரும் புலன் ஓட்டு அறும் ஆசை அறும் உளத்து ஆனந்த நாட்டம் உறும் குறு நாடகம் காணவே.
காளியோடு ஆடிக் கனகா சலத்து ஆடிக் கூளியோடு ஆடிக் குவலயத்தே ஆடி நீடிய நீர் தீ கால் நீள் வான் இடை ஆடி நாள் உற அம்பலத்தே ஆடும் நாதனே.
மேரு நடு நாடி மிக்கு இடை பிங்கலை கூரும் இவ் வானின் இலங்கைக் குறி உறும் சாரும் திலை வனத் தண் மா மலையத்து ஊடு ஏறும் சுழுனை இவை சிவ பூமியே.