பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முதல் தந்திரம் / மகளிர் இழிவு
வ.எண் பாடல்
1

இலை நல ஆயினும் எட்டி பழுத்தால்
குலை நலவாம் கனி கொண்டு உணல் ஆகா
முலை நலம் கொண்டு முறுவல் செய்வார் மேல்
விலகுறு நெஞ்சினை வெய்து கொள்ளீரே.

2

மனை புகுவார்கள் மனைவியை நாடில்
சுனை புகு நீர் போல் சுழித்து உடன் வாங்கும்
கனவு அது போலக் கசிந்து எழும் இன்பம்
நனவு அது போலவும் நாட ஒண்ணாதே.

3

இயல் உறும் வாழ்க்கை இளம் பிடி மாதர்
புயன் உறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயல் உறும் வானவர் சார் இது என்பார்
அயல் உறப் பேசி அகன்று ஒழிந்தாரே.

4

வையகத்தே மடவா ரொடும் கூடி என்
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது
கையகத்தே கரும்பு ஆலையின் சாறுகொள்
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே.

5

கோழை ஒழுக்கம் குளம் மூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்பு உறுவார்களைத்
தாழத் துடக்கித் தடுக்க இல்லா விடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே.