பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

முதல் தந்திரம் / கல்வி
வ.எண் பாடல்
1

குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன் மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.

2

கற்று அறிவாளர் கருதிய காலத்துக்
கற்று அறிவாளர் கருத்தில் ஓர் கண் உண்டு
கற்று அறிவாளர் கருதி உரை செய்யும்
கற்று அறி காட்டக் கயல் உள ஆக்குமே.

3

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின் தொழுதபின்
மற்று ஒன்று இலாத மணி விளக்கு ஆமே.

4

கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்தும் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.

5

துணை அதுவாய் வரும் தூய நல் சோதி
துணை அதுவாய் வரும் தூய நல் சொல் ஆம்
துணை அதுவாய் வரும் தூய நல் கந்தம்
துணை அதுவாய் வரும் தூய நல் கல்வியே.

6

நூல் ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால் ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடா பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்குகின்றார்களே.

7

ஆய்ந்து கொள்வார்க்கு அரன் வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார் கட்கு
வாய்ந்த மனம் மல்கு நூல் ஏணி ஆமே.

8

வழித்துணையாய் மருந்தாய் இருந்தார் முன்
கழித்துணையாய் கற்று இலாதவர் சிந்தை
ஒழித் துணை யாம் உம்பராய் உலகு ஏழும்
வழித்துணை ஆம் பெரும் தன்மை வல்லானே.

9

பற்று அது பற்றில் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகில் கிளர் ஒளி வானவர்
கற்றவர் பேர் இன்பம் உற்று நின்றாரே.

10

கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான் பல ஊழிதொறு ஊழி
அடல் விடை யேறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்தில் இருந்தானே.