பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

இரண்டாம் தந்திரம் / பிரளயம்
வ.எண் பாடல்
1

கருவரை மூடிக் கலந்து எழும் வெள்ளத்து
இருவரும் கோ என்று இகல இறைவன்
ஒருவனும் நீர் உற ஓங்கு ஒளி ஆகி
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே.

2

அலை கடல் ஊடு அறுத்து அண்டத்து வானோர்
தலைவன் எனும் பெயர் தான் தலை மேல் கொண்டு
உலகார் அழல் கண்டு உள் விழாது ஓடி
அலை வாயில் வீழாமல் அஞ்சல் என்றானே.

3

தண் கடல் விட்டது அமரரும் தேவரும்
எண் கடல் சூழ் எம்பிரான் என்று இறைஞ்சுவர்
விண் கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண் கடல் செய்யும் கருத்து அறியாரே.

4

சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி
அமைக்க வல்லார் இவ் உலகத்து உளாரே
திகைத் தெண் நீரில் கடல் ஒலி ஓசை
மிகைக் கொள அங்கி மிகாமை வைத்தானே.

5

பண்பழி செய் வழி பாடு சென்று அப்புறம்
கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண்பழி யாளனை நாடிச் சென்று அச்சிரம்
விண் பழியாத விருத்தி கொண்டானே.