பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அங்கி செய்து ஈசன் அகல் இடம் சுட்டது அங்கி செய்து ஈசன் அலை கடல் சுட்டது அங்கி செய்து ஈசன் அசுரரைச் சுட்டது அங்கி அவ் ஈசற்குக் கை அம்பு தானே.
இலயங்கள் மூன்றினும் ஒன்று கல் பாந்த நிலை அன்று அழிந்தமை நின்று உணர்ந்தேன் ஆல் உலை தந்த மெல்லரி போலும் உலகம் மலை தந்த மா நிலம் தான் வெந்ததுவே.
பதம் செய்யும் பாரும் பனிவரை எட்டும் உதம் செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாம் குதம் செய்யும் அங்கி கொளுவி ஆகாசம் விதம் செய்யும் நெஞ்சில் வியப்பு இல்லை தானே.
கொண்டல் வரை நின்று இழிந்த குலக்கொடி அண்டத்துள் ஊறி இருந்து எண் திரை ஆகி ஒன்றின் பதம் செய்த ஓம் என்ற அப்புறக் குண்டத்தின் மேல் அங்கி கோலிக் கொண்டானே.
நித்த சங்காரம் உறக்கத்து நீள் மூடம் வைத்த சங்காரமும் சாக்கிரா தீதம் ஆம் சுத்த சங்காரம் தொழில் அற்ற கேவலம் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே.
நித்த சங்காரம் இரண்டு உடல் நீவுதல் வைத்த சங்காரமும் மாயா சங்காரம் ஆம் சுத்த சங்காரம் மனாதீதம் தோயுறல் உய்த்த சங்காரம் சிவன் அருள் உண்மையே.
நித்த சங்காரம் கரு இடர் நீக்கினால் ஒத்த சங்காரம் உடல் உயிர் நீவுதல் சுத்த சங்காரம் அதீதத்துள் தோய் உறல் உய்த்த சங்காரம் பரன் அருள் உண்மையே.
நித்த சங்காரமும் நீடு இளைப் பாற்றலின் வைத்த சங்காரமும் மன்னும் அனாதியில் சுத்த சங்காரமும் தோயாப் பரன் அருள் உய்த்த சங்காரமும் நாலாம் உதிக்கிலே.
பாழே முதலா எழும்பயிர் அப்பயிர் பாழாய் அடங்கினும் பண்டைப் பாழ் பாழ் ஆகா வாழாச் சங்காரத்தின் மால் அயன் செய்தி ஆம் பாழாம் பயிராய் அடங்கும் அப்பாழிலே.
தீய வைத்து ஆர்மின்கள் சேரும் வினைதனை மாய வைத்தான் வைத்தவன் பதி ஒன்று உண்டு காயம் வைத்தான் கலந்து எங்கும் நினைப்பது ஓர் ஆயம் வைத்தான் உணர் வார வைத்தானே.